Sunday, January 20, 2008

நான் எதிர்பார்ப்பதில்லை..!

நான் விரும்புவதை மற்றவர்களும் விரும்ப வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை.

நான் நினைப்பதைப் போலவே மற்றவர்களும் நினைக்க வேண்டியதுமில்லை.

என்னுடைய விருப்பு பலருக்கு வெறுப்பாகலாம்.நான் வெறுப்பதை பலர் விரும்பலாம்.

இவை மனித இயற்கை.என்னைப் போன்றே எண்ணமுள்ளவர்களைக் காணும் போது மனது மகிழ்வதும் இயல்புதானே.நேரெதிரான எண்ணமுள்ளவர்களை சந்திக்கும்போது வருத்தப்படுவேன் ஆனால் அவர்களை வெறுப்பதில்லை.

எவர் எப்படி பட்டவராக இருந்தாலும் நாம் அவர்களிடம் நன்றாக நடந்து கொண்டால் அவர்களும் நம்மிடம் நன்றாக நடந்து கொள்வார்கள்.நம்மிடம் நன்றாக நடந்து கொள்கிறவர்கள் எல்லோருமே நல்லவர்கள் தான்..

No comments: