Tuesday, February 26, 2008

நட்பின் வழியது..!

இடமாற்றம், வேலைப் பளு, புதிய நண்பர்கள்,காதலி, குடும்பம், தயக்கம், தலைக்கனம், ஞாபக மறதி, நேரமின்மை,சோம்பேறித்தனம், வாக்குவாதங்கள்
வாக்கு மீறல்கள்,மாறிய தொலைபேசி எண், அதைக் கொடுக்காமல் விட்ட எத்தனம், நான் அனுப்பி பதில் இல்லாத, நீ அனுப்பி நான் படிக்கத் தவறிய மின்னஞ்சல்கள், தேவையற்றதாகத் தோன்றி, பேசாமல் விட்ட வார்த்தைகள்
உன்னை நானும், என்னை நீயும் புரிந்துகொண்டமை, சரியாகவோ தவறாகவோ, முதிர்ச்சி, வயதிலும் மனதிலும், நடந்ததும் பொய்யாகிபோனதுமான  எதிர்பார்ப்புகள், அடைக்க மறந்த கடன்,அதைக் கேட்டுத் தொலைத்த நீ ,இன்னபிற இன்னல்களுக்கிடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு!

No comments: