Friday, February 29, 2008

என் பயணம்..!

பயணங்கள் இனிமையானவை ஒவ்வொரு பயணமும் நமக்கு ஏதோ ஒரு அனுபவத்தைதருகின்றது.

ஒவ்வொரு பயணத்திலும் நாம் எதையோ தேடி போகின்றோம்.என்னுடைய முதல் பயணம் 1995-ஆம் ஆண்டு நான் 5-ஆம் வகுப்பு படித்தபோது தொடங்கியது.

நான் முதன் முதலில் சென்ற இடங்கள் பழநி மற்றும் கொடைக்கானல்.விவரம் தெரியாத வயதில் சென்றதால் அப்போது நடந்தவைகள் சரியாக நினைவில் இல்லை.இருந்தாலும் கோடைக்காணலில் குணா படம் எடுத்த குகையை பார்த்தது.செலவுக்காக வீட்டில் வாங்கி சென்ற 50 ரூபாயில்.அங்கிருந்த குரங்குகளுக்கு வாழைபழம் வாங்கி போட்டது வீட்டில் இருந்து கட்டி சென்ற புளிசாதத்தை பகிர்ந்து உண்டது.என்று சில நிகழ்ச்சிகள் மட்டும் நினைவில் இப்போதும் இருக்கின்றது.

மொத்தத்தில் எனது முதல் பயணம் புளியோதரை வாசத்தில் தொடங்கிபுழுதி வாசத்துடன் முடிந்தது..!

வேலை நிமித்தமாகவும் மற்றும் சுற்றுலாவுக்காகவும் நான் இதுவரை சென்ற இடங்கள்....

சென்னை
கோயம்புதூர்
கொடைக்கானல்
ஊட்டி
மைசூர் Palace
கர்நாடகா
தென்காசி
வால் பாறை
அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி(kerala)
வீகாலேண்ட் (Kerala)
டெல்லி
நாகர் கோவில்
வேளாங்கண்ணி
மூணாரு
பழநி
பிளாக் தண்டர்
Lalbagh Botanical Garden in Bangalore 

MGM Dizzee World (Chennai)

பாபநாசம் அருவி

No comments: